Posts

Showing posts from August, 2024

274 பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம்

Image
 274  பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம் ... இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை. தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள்.  இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது.  பிறகு எண்ணை ஊற்றி கறையானைப்...
Image
274  சிவதரிசனம்     ஆன்மீகப்   பயணம்   -  2                                                              நாள் : 16.06.2024 ஞாயிறு   ஓம்   நமச்சிவாய      சைவ குரவர்கள் அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் ஆகியவரின் தேவார பாடல் பெற்ற 274 சிவ தளங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற மாபெரும் கனவுக்காக ஆன்மீகப் பயணத்தில் இரண்டாவது பகுதியாக ஓசூரில் இருந்து கொங்கு நாட்டில் உள்ள 4 மாவட்டங்கள் அதாவது கோவை திருப்பூர் ஈரோடு நாமக்கல் இங்க இருக்கக்கூடிய ஆறு சிவ தலங்களுக்கு ஒரே நாளில் சென்று இறையருள் தரிசனம் செய்ய முடிவு செய்து 15.06.2024 ம் தேதி இரவு 10 மணிக்கு ஓசூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக   நான் ( பாலசந்தர் ), சரவணன் , சுந்தரபாண்டியன் , ஜெயமணி மற்றும் வேலு ஆகியோர் எனது கியா சோனெட் காரில் கிளம்பி...